இடுகைகள்

அக்டோபர் 3, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
                                                            இதழியல் பாடம் இதழியல் படிப்பவர்கள் என்ன சம்பாதிக்க முடியும் என நினைப்பார்கள். ஆனால் அதில் சம்பாதிக்க முடியாதவர்களே கிடையாது. பத்திரிகைகள்,தொலைக்காட்சிகள்,வானொலி,ஆப்கள் இவைதான் இன்றைய பேசும் பாடுபொருள்.  அதைக்கற்பதுதான் இதழியல். அன்று ஆங்கிலேயர் ஓட்டம் பிடித்ததற்கே இந்த பேனாதான் காரணம். 

விழிப்புணர்வு தேவை!

வாணி மின்னிதழ்-அக்டோபர்2024 வாணி மின்னிதழ் ஆரம்பித்து 10 வருடங்களைக் கடந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பிற்காக சென்னையில் காவல்துறை சார்பில் இயங்கி வரும் மியூசியத்தில் எடுக்கப்பட்ட காட்சி இது. எல்லோரும் பார்க்கவேண்டிய செய்திகள் இது. பண்டிகைக்காலங்களில் கீழே கிடக்கும் பொருட்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம். நமக்குத் தெரியாத புத்தகங்களில்கூட அது இருக்கலாம். இது போன்ற பல நல்ல செய்திகளை தமிழ்நாட்டுக்காவல்துறைப் பெண்கள் தருகிறார்கள். கத்தியுடன் நிறைந்த இருக்கையைப் பார்க்கும்போது வாஸ்து குறைபாடு என்றேன் நான். அக்காவல்துறைப்பெண் மகளோ எத்தனை ரத்தம் பார்த்திருக்கிறதோ என்றார். புத்தபெருமானை அந்த நேரம் நான் உணர்ந்தேன். அசோகச் சக்கரவர்த்தியே அங்குதான் இருக்கிறாரோ!  

ஹலோ! அடிப்படை வசதி வேண்டாமாங்க!

ஹலோ ! அடிப்படை வசதி வேண்டாமா ங்க!   சென்னையில் தமிழகத்தின் தலைநகரமான நடுநாயகமான எக்மோர் ரயில் நிலையம் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடம் அந்த இடத்தில் தண்ணீர் வசதி குடிப்பதற்கு தாராளமாக இருக்கிறது இருப்பினும் , ஒரு சில குறைகள் திருத்தவே முடியாததாய் விஸ்வரூபம் எடுத்து நிற்பதாக தோன்றுகிறது . இரவு 12 மணிக்கு மேல் எல்லா கடைகளும் பூட்டப்பட்டு விடுகின்றன . சாப்பாடு கூ ட கிடைப்பதில்லை .   அதுபோல பதிவு செய்யப்படும் கவுண்டர்களும் மூடப்பட்டு விடுகின்றன . இதனால் , மக்கள் தூங்குவதற்கு இடம் தேடி அலைகின்றனர் . இருக்கும் அறைகளும் டிக்கெட் எடுத்தவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது இப்படி இருக்கையில் நேற்று வட இந்திய மாநிலத்தைச் சேர்ந்த பல மக்கள் குடும்ப சுற்றுலாவாக வந்தனரோ என்னவோ தெரியவில்லை ….. . தாய்ப்பால் ஊட்டும் அறை என்று இருந்தாலும் அந்த அறையில் சோஃபா பிசுக் பிசுக் என இருந்த. பயன்படுத்திய டயப்பர்   ஒரு மூலையில் கிடந்த். கிளவுஸ் ஒன்று பயன்படுத்திய நிலையில் அங்கே கிடந்தன. மக்கள் அந்த அறை பக்கம் செல்லவேயில்லை. இரண்டாம் வகுப்பு காத்திருப்பு அறையில் மக்கள் ...