இடுகைகள்

ஆகஸ்ட் 17, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
 கண் சரியாகத் தெரியலை! இதுல எங்கே போய் களை பறிக்கிறது! புள்ளை பள்ளிக்கூடம் போயிருக்குது! வந்தா சாப்பாடு கேட்கும்! என்று கணவன் வீரபத்திரனைக் கடிந்தாள் முருகாயி. வயித்துப்புள்ளைக்காரியா இருக்கேன்னு கை நீட்டாமல் இருக்கேன். கட்சிக்காரன் ஊர்வலத்துக்கு தலைக்கு 500 தர்றதா சொல்லியிருக்கான். அதுக்காகக் காத்திட்டு இருக்கேன். உனக்கு வேணும்னா எவன்கிட்டேயாவது போய்ட்டு வந்துடு! காதில் கேட்கமுடியாதபடி வசவுகளை அள்ளி வீசியபடி மது பாட்டிலை வீசி எறிந்தபடி சென்ற கணவனை உற்றுப் பார்த்தபடி இருந்தாள் முருகாயி. மித்ரபட்டினத்தில் குப்பைகள் இருந்தாலாவது குப்பை பொறுக்கி பிள்ளையைப் படிக்க வைக்கலாம். விவசாய இடத்துல கர்ப்பிணியாக இருக்கேன்னு வேற ஒதுக்கி வைக்கிறான். கெஞ்சிக்கூத்தாடி வேலை வாங்கி செய்யலாம்னா கண் சரியாகத் தெரியலை! கண்டாக்டர் கண்ணாடிக்கே இரண்டாயிரம் பில் போடுகிறார். இந்த மித்ர பட்டினத்தில் எப்படி எம்புள்ளையைக் கரை சேர்க்கப்போகிறேனோ கடவுளே! என மாரியாத்தாவிற்கு எட்டணாவை முடிந்து வைத்தாள். காற்று வேகமாக வீசுது! காத்து கருப்பு மாதிரி தெரியுது! இந்தா புள்ளை முருகாயி! உள்ளே போ! உனக்கு தேவையான காய்கறிகளை ...