இடுகைகள்

ஏப்ரல் 18, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
 கலர்கலரா வளையல்களை எப்படி அடுக்கறது என்ற கலையே ஒரு தனி அழகுதான் இல்லையா? யுட்யூபில் பார்த்தபோது சட்டை மாட்டும் ஹேங்கரில் மாட்டியிருந்தனர். இது தவிர வளையல் ஸ்டேண்ட் கடையில் விற்கிறது. எனக்கொரு எண்ணம் தோன்றியது. வேஸ்ட் அட்டைப்பெட்டிகளை வைத்து இடையே மூங்கில்களை இணைத்து வைக்கலாம். இது தவிர வேறு முறை இருந்தால் வாசகர்களே தெரிவிக்கலாமே!
                                              தாய்மொழிக்கல்வி மழை வெளியே வெளுத்துக் கட்டினாலும் மனப் புழுக்க வேதனையில் தமிழினம் தடுமாறிக் கொண்டிருக்கிறது! இணைய வசதி  இருப்பினும் பணி வாய்ப்பு குறைந்திட்டால் யாரே வருவார் தாய்மொழிக்கல்விக்கு!!!
 ஹலோ! ஹலோ! சுகமா இருக்கீங்களா... வாசகர்களுக்கு வணக்கம், தமிழ் புத்தாண்டிற்கு ஒன்றும் விசேஷம் இல்லையா! எனக் கேட்பது புரிகிறது. வேம்பின் வாசனையில் ஒவ்வொரு வீட்டிலும் மணக்க மணக்க அறுசுவையுடன் மகிழ்ச்சி கலந்த உணவுவகைள் உண்டு களித்திருக்கும்போது மின்னிதழில் எதற்கு பரிமாற்றம் என்றே தோன்றியது. பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பாக அனைத்துக்கோவில்களிலும் நடந்தேறியது. அரசியலில் ஆயிரத்தெட்டு மாறுதல்கள் வந்தாலும் அரசியலே எழுதாத மின்னிதழ் என்ற பெருமையை வாணி மின்னிதழ் நிலைநாட்டி வருகிறது. காரணம் என்னை எனது பெற்றோர் படித்த படிப்பிற்கு அரசியலில் காமராசர்போல வரலாம் என்றனர். ஆனால் எனது கணவரோ அது சரிவராது என 2010இல் நிராகரித்து விட்டார். காரணம் பெண்களின் நிலை அரசியலில் இன்னமும் ஒரு நிரந்தர மரியாதையை அடையமுடியவில்லை. குழந்தைகளுக்கென பல பக்கங்களை ஒதுக்கி வரும் இம்மின்னிதழ் ஆன்மிகம்,சமையல்,பசுமை,கவிதை, தொடர்கதை என பிரித்து இயங்கி வருகிறது. மின்மினி கதை என்னாச்சு தெரியுமா எனக் கேட்பது புரிகிறது. அது வரும்.....வரும்..........