இடுகைகள்

ஆகஸ்ட் 14, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
                                 ஜாலியான உணவுத் திருவிழா-தமிழகம்ஆகஸ்ட்-2022 ஒரே வீட்டில் டென்ஷனாக இருக்கவே மதியத்திற்கு மேல் உணவுத்திருவிழா பார்க்கக் கிளம்பினோம். வண்டி நிறுத்த என்று ஒதுக்கப்பட்ட இடம் கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் உள்ளே செல்ல வேண்டியிருந்தது. அதையும் தாண்டி நடந்து சென்று உணவுக் கூடம் செல்ல வேண்டியிருந்தது. தமிழக ஸ்பெஷாலிட்டியே இந்த மக்கள்தாம்பா! வானில் பெயர் தெரியாத பறவைகள் சூரிய அஸ்தமனத்தில் பறந்தபடி இருந்தன. பொதுவாக பொங்கலுக்குத்தான் இப்படி களை கட்டும். ஆனால் இந்த உணவுத் திருவிழாவைக்காண மக்கள் கூட்டம் சிறுவர்,பெரியவர் என வித்தியாசம் இல்லாமல் வந்ததைக் காண ஆச்சரியமாக இருந்தது. அந்த உணவுத்திருவிழா மண்டபத்தில் டெண்ட் அடித்ததைப்போல கொட்டகைதான்! ஆனாலும் மக்கள் வேகமாக வாங்கி உண்பதைக் கண்டபோது இதுபோல இன்னமும் நிறைய உணவுத் திருவிழா நடந்தால் என்ன என்று தோன்றியது. காவல்துறை பல ஏற்பாடுகளைச் செய்த போதிலும் அவர்கள் கட்டுப்பாட்டை மீறி மக்கள் கூட்டம் விரும்பியதை வாங்கி உண்டது. அருகில் சாக்...
                                         இந்தியச் சுதந்திர தினம்-2022 செந்நீர் கலந்த மண்ணில் இன்று  மதச் சாக்கடைகளைச் சுத்தம் செய்ய ஆளின்றி இருப்பதை வெள்ளைப்புறாக்கள் வேதனையுடன்  பார்த்தபடி கண்ணீர் வடிக்கின்றன! காந்தி படத்தை மௌனமாக பார்த்தபடி பட்டொளி வீசுகின்ற சுதந்திரக் கொடிக்கு மூவண்ண பலூன்கள் உயரப் பறந்தபடி வீர வணக்கம் செய்கின்றன! எங்கள் நாட்டில் ஆயிரம் மதங்கள் இருந்தாலும் அன்னியர் வரவை விரும்போம் என்றபடி உயர வளர்ந்த  வேம்பு ஆல் அரச மரங்கள் கைகோர்த்தபடி 75 ஆவது சுதந்திர நாளை மகிழ்வுடன் கொண்டாடுகின்றன!