இடுகைகள்

பிப்ரவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திரௌபதி

                        திரௌபதி என்னவென்று நினைத்து என்னை நீ படைத்தாயோ வியாச பெருமானே! பாரதப்போருக்கே காரணமாய் பாரெங்கும் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் கடந்தும் பேசப்படுகின்ற பாடுபொருளாய் என்னை ஏன் படைத்தாயோ! பெண்ணென்று புவிதனில் உதித்தபோதே உனது மனதில் எழுந்த கற்பனையில் எனக்கு ஐந்து கணவர்களை உருவாக்கியதால் உனக்கென்ன மனமகிழ்ச்சி! ஐவரோடும் மகிழ்வோடு மேற்கத்திய பாணி குடும்பம் நடத்தும் கலையை உலகிற்கு கற்றுக் கொடுக்கவே கற்பனைப் பாத்திரமாய் என்னை நீ படைத்தாயோ! ஆணின் விகாரமனம் உனக்கும் உண்டு என்பதை உறுதி செய்கிறாயா வியாச பெருமானே!   கற்பனா பாத்திரம்தான் என்றாலும் துச்சாதனன் வரலாறு இன்றும் பல இடங்களில் தொடர்வது உன்னால்தானன்றோ! பணிச் சுமையினால்   பாரதிதாசனின் குடும்பவிளக்குப் பெண்கள் ஆறடி கூந்தலை அரையடியாக்கி குழந்தைப் படிப்பிற்காக ஓடும்போது இன்னமும் பெண் ஏன் துச்சாதனனிடமும் துரியோதனிடமும் மன்றாடவேண்டும்! மானம் காக்க இதிகாசத்தினில் வேண்டுமானால் வண்ணவண்ணமாக...
 வாணி மின்னிதழ்   தூதுவளை தொக்கு சளி தொந்தரவுகளால் பெரியவர் முதல் குழந்தைகள்வரை அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு நிறைய பேருக்கு சளி நிரந்தரமாக இருக்கிறது. அவர்களுக்கான குறிப்புதான் இது. தூதுவளை இலை ஒரு பிடி கறிவேப்பிலை ஒரு பிடி சிறிய வெங்காயம் இருபது தேங்காய் துருவல் ஒரு பிடி உளுந்து ஒரு தேக்கரண்டி இஞ்சி ஒரு துண்டு பூண்டு 2 பல் நெல்லிக்காய் ஒன்று வதக்க எண்ணெய் சிறிதளவு எல்லாவற்றையும் நன்றாக கழுவி வதக்கவும். உளுந்தை சிவக்க வருமாறு வறுத்தெடுத்து அதனுடன் சேர்க்கவும். நன்றாக வதங்கியபின் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு பெருங்காயத்தூள்,மிளகுப்பொடி போட்டு தாளித்து மிக்சியில் அரைத்த விழுதைக் கொட்டி   கட்டியானவுடன் இறக்கவும். சப்பாத்தி,பூரி,இட்லி,தோசை போன்றவற்றிற்கு ஏற்றது.